சினிமா செய்திகள்

எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள்: நெகிழ்ச்சியுடன் டுவிட் போட்ட விஜயகாந்த்!

Published

on

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற எனது அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று மத்திய அரசு திரையுலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்தது. இதற்கு முன்னர் தமிழகத்தில் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் மற்றும் சிவாஜி கணேசன் மட்டுமே இந்த விருதை பெற்று உள்ளனர் என்பதும் இவர்களை அடுத்து ரஜினிகாந்த் தான் இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு இந்திய துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து கலைத்துறையில் சேவைசெய்து பல உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version