சினிமா
குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்.. வைரல் புகைப்படங்கள்…
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவரது குரல்கூட இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. அதன்பின் அதில் உண்மையில்லை என பிரமலதா விளக்கமளித்தார்.
அதன்பின் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் நேரிடையாக அவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்த வீடியோ வெளியானது.
இந்நிலையில், இன்று தனது குடும்பத்துடன் அவர் பொங்கல் கொண்டாடினார். இந்த விழாவில் அவரின் மனைவி பிரேமலதா மற்றும் 2 மகன்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் விஜயகாந்த் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.