சினிமா செய்திகள்

ஏவிஎம் ஸ்டுடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த ‘மாநகர காவல்’ பட இயக்குனர்!

Published

on

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘மாநகர காவல்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வறுமையின் காரணமாக ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரபு நடித்த ’பொண்ணு பார்க்க போறேன்’ மற்றும் ’மாநகர காவல்’ ஆகிய படங்களை இயக்கியவர் தியாகராஜன். இவர் சினிமா தொடர்புடைய டிப்ளமா படிப்பு படித்து அதன் பின் சினிமாவுக்கு வந்தவர் என்பதும் படிப்படியாக மூன்று படங்களை இயக்கினார் என்பதும் அதில் ‘மாநகர காவல்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

‘மாநகர காவல்’ திரைப்படம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் ஒரு கட்டத்தில் வறுமையில் வாடிய தியாகராஜன், அம்மா உணவகத்தின் உதவியால் சாப்பிட்டு அழுக்கு உடையுடன் சென்னையின் தெருக்களில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை அவர் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்ததாகவும் அவரை அவரது உடலை மாநகர காவல்துறையினர் கைப்பற்றி இறுதிச்சடங்கு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதுகுறித்து இணை இயக்குனர் நீலன் கனிஷ்கா என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பதாவது: சினிமாவில் வெற்றி மேல் வெற்றி அடையாமல் ஏவிஎம் முன்பாகவே உயிரிழந்து மாநகர காவல் துணையோடு அன்னாரின் இறுதி நாள் இப்படியாக முடிந்தது காலத்தின் கோலம் இன்றி வேறென்ன?

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

என்று பதிவு செய்துள்ளார்

seithichurul

Trending

Exit mobile version