தமிழ்நாடு
கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வர முடியுமா? உதயநிதிக்கு விஜயபிரபாகரன் கேள்வி!
எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை எடுத்து கொண்டு வந்த உதயநிதி, கச்சத்தீவில் ஒருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா என கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பாஜக அரசு இன்னும் அந்த மருத்துவமனை குறித்த வேலைகளை தொடங்காமல் இருப்பது குறித்து கிண்டல் செய்யும் வகையில் சமீபத்தில் இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலை எடுத்து வைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கலாய்த்தார். இதுகுறித்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உதயநிதியின் இந்த செயலை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி கேட்கிறார். நல்ல கேள்விதான். ஆனால் உதயநிதி கச்சத் தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா? அவர்கள் தங்கள் மீது குறையை வைத்துக்கொண்டு அடுத்தவர்களைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்’ என விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
விஜயபிரபாகரனின் இந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.