சினிமா செய்திகள்
ஒருசில மணி நேரத்தில் ‘பீஸ்ட்’ டப்பிங்கை முடித்த விஜய்: ரகசியம் இதுதான்!
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் டப்பிங் பணியை இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்து விடுவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தளபதி விஜய் படத்தின் ‘பீஸ்ட்’ டப்பிங் பணியை ஒரு சில மணி நேரங்களில் முடித்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் படப்பிடிப்பு முடிந்த அன்று விஜய் மற்றும் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டப்பிங் பணியை சமீபத்தில் தொடங்கிய விஜய் ஒரு சில மணி நேரங்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம் இந்த படத்தில் விஜய்க்கு மிகக்குறைந்த வசனங்களே உள்ளதாகவும் அதுவும் அழுத்தமான நகைச்சுவை ததும்பிய ஆழமான வசனங்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுக்கும் ’டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் மிகக்குறைந்த வசனங்கள்தான் இருக்கும் என்பதும் ஆனால் ஒவ்வொரு வசனமும் மனதில் பதியும் வகையில் இருந்தது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் ‘பீஸ்ட்’ படத்திலும் விஜய்க்கு மிகக்குறைந்த வசனங்கள் இருக்கும் என்றாலும் அந்த வசனங்கள் அதிரடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகக்குறைந்த வசனங்கள் என்பதால்தான் விஜய் ‘பீஸ்ட்’ படத்தின் டப்பிங் பணியை ஒரு சில மணி நேரங்களில் முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க விஜய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.