சினிமா

யாஷிகாவை ஏமாற்றியது விஜய் டிவி டிவிட்டரில் பதிவிட்ட நடிகை ஸ்ரீப்ரியா!

Published

on

இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப்படத்தை அடுத்து அவருக்குப் பல பட வாய்ப்புகள் வந்தும் அதை நிராகரித்து விட்டு இந்தப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யாஷிகா மற்றும் பாலாஜி ஆகிய இரண்டு பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதில் யாஷிகா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பதைப் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் யாஷிகா வெளியேற்றம் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை ஸ்ரீப்ரியா. ஐஸ்வர்யாவை ஜெயிக்க வைப்பதற்காகவே யாஷிகாவை பிக்பாஸ் டிராமா செய்து வெளியேற்றிவிட்டது என மக்களிடம் செய்திகள் பரவி வருகிறது.

விஜய் டிவி பல முறை எனக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. யாஷிகா வெளியேற்றமும் எனக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

seithichurul

Trending

Exit mobile version