டிவி
மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா ‘பாரதி கண்ணம்மா’ ரோஷிணி..?
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரமாக நடிகை ரோஷிணி நடித்து வருகிறார். ரோஷிணிக்கு தமிழக இல்லங்களில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இந்த சூழலில் சமுக வலைதளங்களில் நடிகை ரோஷிணிக்கு மன நலம் பாதிக்கப்பட்டு காணப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
அதாவது, சீரியலில் குழந்தை பெற்றெடுத்த தாய் ஆக கண்ணம்மா இருப்பார். அதேபோல், சீரியலில் குழந்தைகள் 8 வயது வளர்ந்துவிட்டதாக கதை நகரும். ஆனால், ரோஷிணி தனக்கு குழந்தை வேண்டும் எனக் கேட்பதாகவும் வீட்டுக்கு வந்தாலும் குழந்தை குறித்து கதாபாத்திரமாகவே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த அத்தனைத் தகவல்களையும் கண்ணம்மா ரோஷிணி மறுத்துள்ளார். தான் மன அளவிலும் உடல் அளவிலும் மிகவும் நலமுடன் இருப்பதாகவே தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தான் எப்போதும் தொழில் பாரத்தை மனதுக்குள் ஏற்றுக்கொள்ளாதவள் என்றும் ரசிகர்களுக்காக விளக்கம் அளித்துள்ளார்.