டிவி
முடிவுக்கு வருகிறதா விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்… இயக்குநர் கொடுத்த ஹின்ட்..!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்விக்கு அந்த சீரியலின் இயக்குநர் ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். கண்ணம்மா கதாபாத்திரம் படும் கஷ்டங்களை சமுக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வதும் சில நேரம் கண்ணம்மாவை ட்ரோல் செய்வதும் என இந்த சீரியல் எந்தப் பக்கம் சாய்ந்தாலும் வைரல் லிஸ்டில் எப்போதுமே இடம் பிடித்துவிடும்.
இந்த வகையில் இந்த வாரம் சீரியலில் விரட்டப்பட்ட கணவன் வீட்டுக்குத் தன் மகள் மூலம் மீண்டும் கண்ணாம்மா உள்ளே நுழைவது போன்ற வகையில் கதை நகர்கிறது. இதனால் சீரியல் முடிய போகிறதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குநர் பிரவீன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு ஹின்ட் கொடுத்துள்ளார்.
பிரவீனின் பேட்டியில், “பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி உடன் கண்ணம்மா மீண்டும் வாழ்க்கையில் சேரும் போது சீரியல் முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணம்மா வீட்டுக்குள் நுழைந்ததால் மட்டும் சீரியல் முடியாது. இனிமே தான் மகள்கள் மூலம் இருவரையும் ஒண்ணு சேர்க்க கதை நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.