சினிமா செய்திகள்

அட்லி-ஷாருக்கான் படத்தில் விஜய்: சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாரா?

Published

on

பிரபல இயக்குனர் அட்லி, விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நிலையில் தற்போது அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்கு ஜவான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் அதற்காக அவர் பெரிய அளவில் கால்சீட் கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கிய நிலையில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் பிரியாமணி, யோகிபாபு காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் விஜய் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே அவர் ரவுடி ரத்தோர் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் அக்ஷய்குமார் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நட்புக்காக அவர் தோன்றியதாகவும் கூறப்பட்டது.
அதேபோல அட்லீயிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக ஷாருக்கான் மற்றும் விஜய் நடனம் ஆடும் காட்சியை திட்டமிட்டுள்ளதாகவும் இந்தப் பாடல் காட்சி வெகு விரைவில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் – அட்லி படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version