சினிமா செய்திகள்
விஜய்யின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் சஞ்சய் விஜய்!
20 ஆண்டுகளாக விஜய்யின் நிறைவேறாத ஆசையை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் அவருக்கு நடிப்பதை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. கடந்த 2000 ஆண்டு அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் ஆனால் அடுத்தடுத்து படங்களை கமிட் ஆனதால் இயக்குநராகும் ஆசை நிறைவேறாமல் போனதாகவும் கூறப்படுகிறது .
தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் 100 கோடி சம்பளம் வாங்குவதால் இயக்குனராகும் வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இயக்குனர் ஆகும் விஜய்யின் கனவை அவரது மகன் சஞ்சய் நிறைவேற்ற உள்ளதாக தெரிகிறது.
கனடாவில் இயக்குனருக்கான படிப்பை முடித்துள்ள சஞ்சய் விஜய் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க போவதாகவும் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.