கிரிக்கெட்

உலகக் கோப்பையில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; விஜய் சங்கர் சாதனை!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விஜய் சங்கர்.

புவனேஷ் குமாரின் 3வது ஓவரில் காயம் ஏற்பட்டு பெவிலியனுக்கு செல்ல, விஜய் சங்கர் அந்த ஓவரை நிறைவு செய்ய அழைக்கப்பட்டார்.

உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பந்து வீசிய 28 வயதான விஜய் சங்கருக்கும் அந்த பந்து கண்டிப்பாக விக்கெட் கொடுக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் பிளேயரான இமாம் உல் ஹக்-ஐ எல்பிடபள்யு செய்தார். அப்போது அவர் 18 பந்துகளுக்கு 7 ரன்கள் அடித்திருந்தார்.

மேலும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது விக்கெட்டையும் இன்சைட் எட்ஜ் மூலமாக விஜய் சங்கர் வீழ்த்தினார்.

seithichurul

Trending

Exit mobile version