சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம்: 2 கெட்டப்புகளில் அசத்தலான நடிப்பு!

Published

on

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். மிக குறுகிய காலத்திலேயே அதிகப் படங்களில் நடித்து விட்டார்‌. இப்போது தனது 50 வது படத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, ‘தென்மேற்கு பருவக்காற்று’ எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். அதன் பிறகு, இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நிதிலன் என்பவர் இயக்கி வருகிறார். ஏற்கனவே ‘குரங்கு பொம்மை’ எனும் திரைப்படத்தை இயக்கிய இவர், விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் வித்தியாசமான இரண்டு கேரக்டர்களை கொடுத்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக இதுவரையிலும் விஜய் சேதுபதி நடிக்காத கெட்டப்புகள் இது என்றும் கூறப்படுகிறது.

50-வது திரைப்படம்

விஜய் சேதுபதியின் 50வது படத்தில் இவரது கெட்டப் பழிவாங்கும் ஒரு வித்தியாசமான கதை எனவும், இந்தப் படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள 2 வித்தியாசமான கெட்டப்புகள் நிச்சயம் அவரது ரசிகர்களை கவரும் எனவும் இப்படத்தின் தயாரிப்பாளர் சுதன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை 85 நாட்களில் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 50 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகள் மட்டும் இன்னும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக நடிகர்களின் 50-வது படம் என்பது முக்கியமான ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் கருதப்படும் நிலையில், விஜய் சேதுபதியின் 50-வது படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version