சினிமா செய்திகள்
டிஜிகாப் செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்சேதுபதி!
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டிஜிகாப் எனும் புதிய செயலியை காவல் ஆணையர் விஸ்வநாத் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகப்படுத்தினர்.
காவல் துறையின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகர் விஜய்சேதுபதி, பொதுமக்கள் பார்வையில் போலீசார் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் அனைத்து போலீசாரும் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
பின்னர் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்த டிஜிகாப் செயலி மூலம், சென்னையில் அடிக்கடி திருடுப்போகும் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் குறித்த புகாரை தெரிவிக்கவும், அவற்றை கண்டுபிடித்து கொடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.