சினிமா செய்திகள்

கொரோனா காலத்திலும் கட்டிப்பிடிப்பதை நிறுத்தாத விஜய் சேதுபதி!

Published

on

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூட பாராமல் வழக்கம் போல் விக்னேஷ் சிவனைக் கட்டியணைத்து க் கொண்டார்.

விஜய் சேதுபதி என்றாலே தற்போது கட்டிபிடி வைத்தியம் தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவராததால், இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின.

இந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நடிகர் விஜய் சேதுபதி ஹைதராபாத் சென்றுள்ளார்.

அங்கு அவரை வரவேற்ற விக்னேஷ் சிவன், கொரோனா இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலல் இருந்தாரோ என்னவோ, பூங்கொத்தை தள்ளி இருந்தபடியே தூக்கி வீசி கேட்ச் கொடுத்தார்.

ஆனால் பதிலுக்கு விஜய் சேதுபதியோ, அதை கண்டுகொள்ளாமல் நேராக விக்னேஷ் சிவனை கட்டியணைத்துக் கொண்டார். நல்ல வேளையாக முத்தம் கொடுக்கவில்லை. இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending

Exit mobile version