சினிமா

முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி: முதல் பயோபிக் திரைப்படம்?

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தைப்பிடித்துள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபது முதன் முதலாக பயோபிக் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு 800 என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதன்முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் முத்தையா முரளிதரன். அதைக் குறிக்கும் விதமாகவே இந்த படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 800 திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகனான முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானால் பயோபிக் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் முதல் படமாக அமையும்.

Trending

Exit mobile version