சினிமா
அனபெல் சேதுபதி: திரைப்பட விமர்சனம்
பழம்பெரும் இயக்குனர் ஆர் சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தர்ராஜனின் முதல் திரைப்படமான அனபெல் சேதுபதி என்ற படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்.
அரண்மனை ஒன்றில் ஒரு கூட்டமாக பேய்கள் சிக்கியுள்ளன. அந்த பேய்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமானால் அந்த அரண்மனைக்குள் புதிதாக வருபவர் சமைத்து சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டும் என்ற சாபம் உள்ளது. அதனால் தங்களை விடுவிக்க யாராவது வர மாட்டார்களா என்று அந்த அரண்மனையில் உள்ள பேய்கள் த்திருக்கின்றன.
விஜய்சேதுபதி படம் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்தும், அதன் பின்னர் கிளைமாக்ஸில் ஐந்து நிமிடங்களும் வருகிறார். அதனால் இந்த படம் விஜய்சேதுபதி படம் என நினைத்து யாரும் ஏமாற வேண்டாம். படத்தை முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பது டாப்சி தான் என்பதும் அவருடைய கேரக்டரை சுற்றியே கதை நகர்கிறது. ஆனால் டாப்சியின் கேரக்டரும் சொதப்பலாக இருப்பதால் ஒரு திறமையான நடிகையை வீணடித்துள்ளனர்.
விஜய்சேதுபதியின் காட்சிகள் மட்டும் ஓரளவுக்கு திருப்தியாக உள்ளது என்பது ஒரு ஆறுதல். கிருஷ்ணா கிஷோரின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இல்லை. பின்னணி இசையும் திரைக்கதை போலவே உள்ளது. இந்த படத்தின் ஒரே நல்ல அம்சம் ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளர் கவுதம் ஜார்ஜ், அழகிய அரண்மனையை வளைத்து வளைத்து தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளருக்கு மட்டும் நமது வாழ்த்துக்கள்.
2.0/5