சினிமா செய்திகள்

’அடாவடி அப்பா’ மொமென்ட்… நெகிழ்ச்சி உடன் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி!- வீடியோ

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தனது தந்தையின் தைரிய குணம் குறித்த ஒரு நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் சமுத்திரகணி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஏலே’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘அடாவடி அப்பா’ என்ற தலைப்பில் சில நிமிடங்கள் தனது அப்பாவின் அடாவடி மொமென்ட் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “சின்ன வயசுல ஒரு முற நாங்க குடும்பத்தோட குற்றாளம் போயிட்டு ரயில்ல சென்னை வந்திட்டு இருந்தோம். அப்போ ரிசர்வ் பண்ணாத பெட்டியில வரும் போது ஒரு ஆளு ரொம்ப சத்தம் போட்டு எல்லாருக்கும் இடைஞ்சல் பண்ணிட்டு இருந்தாரு. சுத்தி இருந்தவுங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில அடக்க முயற்சி செய்தும் அந்த ஆளு அமைதியாவே உட்காரல.

அப்போ பெர்த்-ல படுத்திட்டு இருந்த எங்க அப்பா வேகமா எழுந்து கால் வச்சு அந்த சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவரை எட்டி உதச்சிட்டு பேசாம படுத்துட்டாரு. அவமானம் தாங்காம அந்த நபர் பயங்கரமா கத்தி, மிரட்டல் எல்லாம் கொடுத்திட்டு அமைதியா போயிட்டாரு. சென்னை வந்ததும் எதுவும் செய்யாம அமைதியாவே போயிட்டார்’ என்றார்.

மேலும் விஜய் சேதுபதி கூறுகையில், “சென்னை வந்ததும் அந்த நபர் மிரட்டிய மாதிரி அப்பாவ எதும் செஞ்சிடுவாரோன்னு பயந்து எங்க அப்பாட்டையே கேட்டேன். அதுக்கு அவரு ‘இல்லப்பா, அவரோட கவுரவம் அந்த எடத்துல அடி வாங்கிருச்சுன்னு அந்த ஆளு கத்திட்டு இருந்தான். ஆனா அவன் ஒரு கோளைன்னு அவனுக்கே தெரியும்’ன்னு சொன்னார்” என்றார்.

அப்பாவிடம் இருந்து தான் இன்றைய வாழ்க்கையில் தான் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version