சினிமா செய்திகள்

ஃபேமிலிமேன் 3 தொடரில் நடிக்கின்றேனா? விஜய்சேதுபதி பேட்டி

Published

on

சமந்தா நடிப்பில் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ஃபேமிலி மேன் 2 என்ற தொடர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக விடுதலைப் புலிகள் குறித்து இந்த தொடரில் அவதூறான காட்சிகள் இருப்பதாகவும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், இருப்பினும் அமேசான் ஓடிடியில் அந்த தொடர் வெளியானது என்பதும் தற்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஃபேமிலிமேன் 3’ தொடர் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து விஜய் சேதுபதி பேட்டி அளித்தபோது ’ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கிறேன் என்றும் ஆனால் அது ’ஃபேமிலி மேன் 3’ கிடையாது என்றும் அது வேறு கதையம்சம் கொண்டது என்றும் தெரிவித்தார்.

மேலும் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை என்றும் ’வடசென்னை’ படத்தில் நடிப்பதை நான் மிஸ் பண்ணிவிட்டேன் என்றும் அந்த குறையை தற்போது ’விடுதலை’ படத்தில் நடித்து போக்கி கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ‘விடுதலை’ படம் மிக நன்றாக அமைந்துள்ளது என்றும் அவரிடமிருந்து நிறைய நான் கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சூரி என்ற படத்தில் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் என்று அவருக்கு நல்ல ஹீரோவாக நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும்போது அனைவருக்கும் நல்ல எனர்ஜி கிடைக்கும் என்றும் அந்த அளவுக்கு எனர்ஜி உள்ள நபர் வெற்றிமாறான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது குறித்தும், சினிமா தொழிலாளர்கள் குறித்தும் அரசு யோசிக்க வேண்டும் என்றும் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்தம் சட்டம் தேவை இல்லாதது என்றும் ஏற்கனவே சென்சார்போர்டு என்ற ஒரு அமைப்பு இருக்கும்போது இது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எத்தனையோ வேலை இருக்கும்போது சினிமாவை மட்டும் குறி வைப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

Trending

Exit mobile version