சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகினாரா? விலக்கப்பட்டாரா?

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்து வரும் தகவல்கள் கமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

’விக்ரம்’ படத்தில் நான்கு பேர் வில்லன்களாக நடிக்கவிருப்பதாகவும் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மலையாளத்தில் தொடர்ச்சியாக பகத் பாசில் படங்களை ஒப்புக் கொண்டு வருவதால் ’விக்ரம்’ படத்தில் நடிப்பாரா? அல்லது கழண்டு கொள்வாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட ’விக்ரம்’ படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பேசப்பட்ட சம்பளம் திருப்தியாக இல்லை என்பதால் அவர் விலகி விட்டதாகவும் ’மாஸ்டர்’ படத்தில் அவருடைய டாமினேஷன் அதிகமாக இருந்ததால் அதேபோன்ற ஒரு ஆபத்து ’விக்ரம்’ படத்திற்கும் வந்துவிடக்கூடாது என்பதால் கமல் அவரை விலக்கி விட்டதாகவும் இருவேறு தகவல்கள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ’தலைவன் இருக்கிறான்’ படத்திலும் அதற்கு முன்னரே ’இந்தியன் 2’ படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது என்பதும் அந்த படங்களில் நடிக்க முடியாத நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இருந்தும் அவர் விலகி உள்ளதாக வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பாபநாசம் படத்தை முடித்துவிட்டுதான் ’விக்ரம்’ படத்தில் கமலஹாசன் நடிக்கவிருப்பதால் இந்த படம் எப்போது தொடங்கும் என்ற தெளிவான தகவலும் இல்லாமல் உள்ளது. ஒருவேளை ’இந்தியன் 2’ மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ’விக்ரம்’ படம் அடுத்த ஆண்டில்தான் தொடங்கப்படும் என்றும் கூறப்படுவதால் இந்த படத்தில் ஒப்பந்தமான பல நடிகர்கள் விலகி கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version