சினிமா

சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?

Published

on

பாலிவுட்டில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப் என படுபிசியாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் அரண்மனை வரிசை படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இன்று சந்தானம் மற்றும் சுந்தர் சியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியும் கலந்து கொண்டார். மீண்டும் சந்தானம் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான காபி வித் காதல் திரைப்படம் மிகப்பெரிய ஃபிளாப் ஆனது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி நீலகண்டன், ரைசா வில்சன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளத்தையே ஊட்டிக்கு டூர் கூட்டிட்டுப் போய் ஜாலியாக விளையாடிட்டு வந்தது போல படத்தை எடுத்து வைத்திருந்தார் சுந்தர் சி.

அதற்கு முன்னதாக ஆர்யாவை வைத்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் பார்க்கவே முடியாத அளவுக்கு படு மோசமாக இருந்ததாக பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி சிக்கி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த், மூன்றாம் பாகத்தில் ஆர்யா என மூவருமே செகண்ட் ஹீரோவாகவே நடித்திருந்தனர்.

மெயின் ஹீரோ அந்த படங்களில் சுந்தர் சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்சேதுபதி வில்லனாகவே நடிக்கிறாரே செகண்ட் ஹீரோவாக நடிக்க மாட்டாரா என்கிற ரீதியில் சுந்தர் சி அவரை வைத்து அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக கலாய்த்து வருகின்றனர்.

நட்புக்காக யார் அழைத்தாலும் மறுப்பு சொல்லாமல் நடித்து வரும் மாமனிதன் விஜய்சேதுபதி மிஷ்கினுக்காக பிசாசு 2 படத்தில் நடித்ததை போலவே இந்த படத்திலும் நடிக்க உள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version