சினிமா செய்திகள்
மூன்று பாகங்களாக தயாராகும் விஜய்சேதுபதி படம்!
விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ஒன்றின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பிரபல இயக்குநர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கம் திரைப்படம் ’அனபெல் சுப்பிரமணியன். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதும் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தை முதலிலேயே மூன்று பாகங்கள் உருவாக்க இயக்குனர் தீபக் சுந்தராஜன் முடிவு செய்துவிட்டதாகவும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதனை அடுத்து மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடரும் என்றும் இந்த படத்தின் மூன்று பாகங்களிலும் தொடர்ச்சியான ஒரே கதை என்றும் அதுமட்டுமின்றி விஜய்சேதுபதி. டாப்ஸி தான் மூன்று பாகங்களிலும் நடிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ’அனபெல் சுப்பிரமணியன்’ என்ற திரைப்படத்தின் டைட்டிலை ’அனபெல் சேதுபதி’ என்று மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் தற்போது அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுவது சகஜம் என்றாலும் முதல் பாகத்திற்கும் அடுத்த பாகத்திற்கும் கதை மற்றும் நட்சத்திரங்கள் சம்பந்தமில்லாமல் பல திரைப்படங்கள் உள்ளன. ஆனால் விஜய் சேதுபதியின் இந்த படத்தின் மூன்று பாகங்களிலும் ஒரே கதை என்பது குறிப்பிடத்தக்கது.