சினிமா
அடேங்கப்பா! 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் விஜய்சேதுபதி?
நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவே தமிழ் படங்களில் 10 முதல் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தற்போது அதிரடியாக 50 கோடி வரை சம்பளம் கேட்கிறார் விஜய்சேதுபதி என ஹாட்டான தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணை நடிகராக நடித்து வந்த விஜய்சேதுபதி கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி இயக்கிய குறும்படங்களில் நடித்து வந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படம் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில், கோலிவுட்டில் முன்னணி நடிகராக மாறினார்.
ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
மேலும், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் டிகே இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸில் காவல் அதிகாரியாக நடித்து அசத்தி உள்ளார். கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு அதிகபட்சமாக 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறூகின்றனர்.
அடுத்ததாக கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் உருவாக உள்ள கோஸ்ட் படத்திலும் விஜய்சேதுபதி தான் வில்லனாம். வில்லனாக புதிய படங்களில் நடிக்க தற்போது 50 கோடி வரை விஜய்சேதுபதி சம்பளம் கேட்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
50 கோடி சம்பளம் என்று சொன்னால், ஏற்கனவே கமிட் ஆன படத்தில் இருந்தும் கழண்டு கொண்டு வந்து நடிப்பார் என்றும் கூறுகின்றனர்.