சினிமா செய்திகள்
மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி: படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்!
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவதாகவும் அதில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்து வருவதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’பிசாசு 2’ படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி தன்னுடைய காட்சிகளை படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டதாகவும் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சியை திண்டுக்கல்லில் படமாக பட்டதாகவும் கூறப்படுகிறது.
’பிசாசு 2’ படத்தில் விஜய்சேதுபதி ஐந்து நாட்கள் நடித்து கொடுத்துள்ளதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் சில நிமிடங்களே வந்தாலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது ’பிசாசு 2’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த ஆண்டு திரையரங்கில் திரையிடும் பணியில் படக்குழுவினர் இருந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
விஜய் சேதுபதி ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.