சினிமா செய்திகள்

மீண்டும் ஒரே படத்தில் இணையும் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி!

Published

on

விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகிய மூவரும் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் ஏற்கனவே நடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் .

பிரபல இயக்குனர் கிஷோர் பாண்ட்ராங் என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள ’காந்தி டாக்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆறு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

 

Trending

Exit mobile version