சினிமா செய்திகள்

நடிகர் மீது விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் வழக்கு!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் மகாநதி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தான் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றிருந்தபோது பெங்களூர் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததாகவும் அப்போது அவரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றபோது அவருடைய மேனேஜர் தன்னை இழிவுபடுத்தி, தனது சாதி குறித்து தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தன்னை அவருடைய மேனேஜர் ஜான்சன் தாக்கியது மட்டுமில்லாமல் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என்றும் நடிகர் மகாநதி அந்த மனுவில் கூறியுள்ளார்.

திரைத்துறையில் உள்ள ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு உண்மைக்குப் புறம்பாக செய்தி ஆக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது ஜான்சன் அவரது மேலாளர் ஜான்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சைதாப்பேட்டை நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version