தமிழ்நாடு
எனக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவையற்றது: விஜய்
எனக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவை இல்லாதது என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு கட்டுவது சம்பந்தமான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த போது, நீதிபதி. விஜய் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மேல்முறையீடு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவையற்றது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு வாதம் செய்தது. மேலும் நுழைவு வரி தொடர்பான மற்ற வழக்குகளில் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தனக்கு எதிராகா மட்டும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு வாதம் செய்தது.
இறக்குமதி வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி உள்ளது என்றும், கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப் பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் விஜய் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ரூபாய் 32.30 லட்சம் நுழைவு வரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் நடிகர் விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னை தேசவிரோதிகள் என்று கூறுவது தவறு என்றும் என் வழக்கு மட்டும் இல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நுழைவு வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர இருப்பதாகவும் கூறுவது தேவையற்ற கருத்துக்கள் என்றும் விஜய் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.