தமிழ்நாடு
சைக்கிளில் வந்ததற்கான விளக்கத்தை பதறிப்போய் விளக்கிய விஜய் தரப்பு!
நடிகர் விஜய் இன்று தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தார் என்பதும் அவர் வந்தபோது மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்ததை அடுத்து அவரை பாதுகாப்புடன் ஓட்டு போட்ட உடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் விஜய் சைக்கிளில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் ரசிகர்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டதாக தெரிகிறது. அவர் சைக்கிளில் ஏன் வந்தார் என்பதற்கு விளக்கம் அளித்து விஜய் ரசிகர்கள் பதிவு செய்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெட்ரோல் விலையை உயர்வை சுட்டிக்காட்டுவதற்கு தான் விஜய் சைக்கிளில் வந்தார் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை குறிப்பிடுவதற்காகத்தான் சைக்கிளில் வந்தார் என்றும் அவரது ரசிகர்கள் பதிவு செய்ததால் மத்திய அரசு தரப்பில் இருந்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து விஜய்யின் பிஆர்ஓ இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு விளக்கம் தெரிவித்துள்ளார். விஜய்யின் வீட்டுக்கு அருகில்தான் வாக்குச்சாவடி இருந்தது என்பதாலும் வாக்குச்சாவடி அருகே கார் செல்ல முடியாது என்பதாலும் தான் விஜய் சைக்கிளில் சென்றார் என்றும் இதுதவிர விஜய் சைக்கிளில் சென்றதற்கு வேறு எந்தவிதமான காரணமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
சைக்கிளில் சென்றது ஒரு சாதாரண விஷயம் என்றால் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியது ஏன் என்ற கேள்வியை தற்போது நெட்டிசன்கள் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.
#TNElection #TNElections2021 #TNElection2021 #TNAssemblyElections2021 #tnelectionday #Election2021 #Elections2021 #Thalapathy #Vijay #thalapathyfansteam #Thalapathy @actorvijay @Jagadishbliss @BussyAnand @V4umedia_ pic.twitter.com/H6XVkAkKJm
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 6, 2021