சினிமா

20 வருடம் கழித்து ஒரு நல்ல கதை கேக்குறேன்.. நெகிழ்ந்து போன விஜய்…..

Published

on

விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

பீஸ்ட் படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கில் அதிக பட்ஜெட்டுகளில் பிரம்மாண்டமாக படம் எடுக்கும் தில் ராஜ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படம் இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் கதையை கேட்டு நெகிழ்ந்து போய் நடிக்க சம்மதம் கூறியுள்ளார் விஜய். கடந்த 20 வருடத்தில் இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை என விஜய் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் கூறியதாக தெரிகிறது. இது காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போல ஒரு மென்மையான காதல் கதை போல் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எனவேதான், நேரடி தெலுங்கு படம் என்றாலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.

இப்படத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளுக்கும் ஏற்றவாறு கதாநாயகியை தேர்ந்தெடுக்கவுள்ளனர். இப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவை சேர்ந்த முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version