இந்தியா
விஜய் மல்லையாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு: நீதிமன்றத்தில் தகவல்!
![mallaiyaa - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/mallaiyaa.webp)
இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கி விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா உள்பட மூவரிடம் 18 ஆயிரம் கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையா உள்பட மூவரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதில் இந்த தொகை கிடைத்துள்ளதாகவும் மேலும் இவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 18 ஆயிரம் கோடி மீட்க விட்டாலும் இன்னும் சுமார் 50,000 கோடி வரை மீட்கப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் அது மட்டுமின்றி விஜய் மல்லையா உள்பட மூவரையும் இந்தியாவுக்கு வரவழைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆயிரத்து 150 கோடி விஜய் மல்லையா உள்பட மூவர் இடமிருந்து மீட்கப்பட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 18 ஆயிரம் கோடி மீட்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.