சினிமா

ஊரக உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்…….

Published

on

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

vijay

இந்நிலையில், இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விvijayஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் போட்டியிடவுள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றிருந்தனர். எனவே, தற்போது நடைபெறவுள்ள தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடிவெடுத்துள்ளனர்.

vijay

வேட்பாளர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் இறுதி செய்வார்கள் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பரப்புரையில் விஜயின் புகைப்படம் மற்றும் விஜய் மக்கள் இயக்க கொடியை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

Trending

Exit mobile version