சினிமா செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது: அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது என நீதிமன்றத்தில் எஸ் ஏ சந்திரசேகர் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நீதிமன்றத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளான தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்டவர்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதூ. இந்த பதில் மனுவில் விஜய் மக்கள் இயக்கம் கடந்த பிப்ரவரி மாதமே கலைக்க தீர்மானம் இயற்றப்பட்டுவிட்டதாகவும் அந்த இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் ரசிகர்கள் ரசிகர்களாக மட்டுமே இருந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த பதில் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை மீண்டும் அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளிவராத நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்கம் கலக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version