சினிமா செய்திகள்

கொரோனா காலத்தில் விஜய் மக்கள் இயக்கம் செய்த மகத்தான உதவி!

Published

on

தமிழகத்தில் எப்போதெல்லாம் மக்கள் இயற்கை பேரிடர்களால் துயரப்படுகிறார்களோ அப்போதெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஏற்கனவே வெள்ளம் புயல் ஆகிய இயற்கை பேரிடர்கள் வந்தபோது விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்கள்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்டபோதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த உதவி மகத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தலைவிரித்து ஆடி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு தங்களுடைய உதவியை துவங்கியுள்ளனர்.

தல் கட்டமாக விருத்தாசலத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா தடுப்பு உதவி உபகரணங்களை இலவசமாக வழங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதேபோன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர்களும் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்பதும் இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தினர் இவ்வாறு செய்யும் உதவியை பார்க்கும்போது அவர்கள் மீது பொதுமக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version