சினிமா செய்திகள்

கொரோனா காலத்திலும் ரூ.15 கோடி வசூல் செய்த மாஸ்டர்!

Published

on

கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில மாதங்களாகப் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிதாக எந்த படங்களும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

2019 ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாகத் தள்ளிப்போனது. இதனுடன் வெளியாக இருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

ஆனாலும் மாஸ்டர் திரைப்படம் வந்தால் திரையரங்கத்தில் தான் என்று விடாப்பிடியாக நின்றது. மாஸ்டர் படம் திரை அரங்குகளுக்கு வந்தால் நல்ல வரவேற்பு இருக்கும், ஊரடங்குக்குப் பிறகு திரை அரங்குகளுக்குக் கூட்டம் வராத நிலையில் இந்த படத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக இன்று மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் படம் முதல் நாளில் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாக 15+ கோடி ரூபாய் வசூல் ஆனதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version