சினிமா செய்திகள்
தாய், தந்தை உள்பட 11 பேர் வழக்குப்பதிவு செய்த நடிகர் விஜய்!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் என்பதும் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்பதும், தமிழ் திரையுலகில் மட்டும் என்று தென்னிந்திய திரையுலகில் இவரது படங்கள் மிக அதிக வசூலை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய்யை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தது அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் என்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் உள்ள அனைத்து ஹீரோவின் கேரக்டர்களுக்கும் விஜய் என்ற பெயரை வைத்து விஜய் பெயரை மக்கள் மனதில் முதலில் பதிவு செய்தார். அதன் பின்னர் சிறு வயதிலிருந்தே விஜய்யை நடிக்க வைக்க பழக்கியதோடு, அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்களை இயக்கினார். இன்று இந்த அளவுக்கு மிகப்பெரிய அளவில் விஜய் புகழ் பெற்றிருக்கிறார் என்றால் அதற்கு அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் போட்ட அடித்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பேசிக்கொள்வது கூட இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா, விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.