தமிழ்நாடு
ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் நோட்டவுக்கு வாக்களித்தால்? எஸ்.ஏ.சி கருத்து
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சி எத்தனை சதவீத வாக்குகள் பெறும்? எத்தனை தொகுதிகள் பெற்று எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்த தேர்தலில் நோட்டா அதிக அளவு வாக்குகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் எந்த கட்சியையும் பிடிக்காத வாக்காளர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நோட்டா குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஒரு கோடிக்கும் மேல் நோட்டாவில் வாக்களித்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்றும் காமராஜர் அண்ணா போன்ற தூய்மையான தலைவர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தந்தை இயக்குனர் சந்திரசேகரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ் ஏ சந்திரசேகர் கூறியதுபோல் வரும் தேர்தலில் நோட்டாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் வாக்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் 2026 ஆம் ஆண்டு விஜய் களத்தில் இறங்குவார் என்பதை மறைமுகமாக எஸ்.ஏ.சி தெரிவிக்கிறாரா? என்றும் சிலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.