தமிழ்நாடு

விஜய் ஏன் காவி வேஷ்டி கட்டினார்: கேள்விக்கு கோபமடைந்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

Published

on

நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தார். இது குறித்த கேள்விக்கு அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கோபமாக பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது நடிகர் ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் கேப்மாரி என்ற படம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் வெளியான தளபதி பிகில் பட போஸ்டரில் விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவரது தந்தை, என்னிடம் என் படத்தை பற்றி கேளுங்கள் விஜய்யை பற்றி கேட்காதீர்கள். நான் சொன்னது என்னுடைய கருத்து மட்டுமே. அவர் வேட்டி கட்டியிருந்தால் அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள் என கோபமாக பதில் அளித்தார்.

முன்னர் ஒரு விழாவில் விஜய் அரசியலுக்கு வருவார் என மறைமுகமாக பேசிய அவரது தந்தை, பாஜக ஜெயித்தால் நாட்டில் எல்லோரும் காவி வேஷ்டி தான் கட்டிக் கொண்டு அலைய வேண்டும் என கூறியிருந்தார். இதனை தொடர்புபடுத்திதான் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version