தமிழ்நாடு
அபராதமாக விதிக்கப்பட்ட தொகையை நிவாரண நிதியா கொடுக்கின்றாரா விஜய்?
சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூபாய் ஒரு லட்சம் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் விஜய்யின் அபராதம் கட்டும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்திருந்த நிலையில் அந்த தொகையை நிவாரண நிதிக்காக செலுத்த விருப்பமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நடிகர் விஜய் சமீபத்தில் ரோல்ஸ்ராய்ஸ் என்ற வெளிநாட்டுக் கார் வாங்கினார். அந்த காருக்கு இறக்குமதி வரியை அவர் கட்டிவிட நிலையில் நுழைவு வரியையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு அபராதம் விதித்து, விஜய் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளையும் நீதிபதி கூறினார்
இந்த நிலையில் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது
இந்த நிலையில் தனி நீதிபதி முன்பு ஆஜரான விஜய் தரப்பு, கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சம் ஏற்கனவே தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு கொடுத்துள்ளதாகவும் சொகுசு கார் வழக்கில் ரூ.1 லட்சம் அபராத தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விரும்பவில்லை என்றும் கூறி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.