தமிழ்நாடு

விஜய்யால் சைக்கிள் ஓட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பா?

Published

on

தளபதி விஜய் நேற்று சைக்கிளில் ஓட்டு போட வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததற்கு பல்வேறு காரணங்களை அவரது ரசிகர்கள் குறிப்பிட்ட நிலையில் விஜய் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விஜய்யின் வீட்டின் அருகில் தான் பூத் இருந்ததாகவும் அது மட்டுமின்றி அந்த பூத் இருந்த இடத்திற்கு கார் செல்ல முடியாது என்பதால் தான் அவர் சைக்கிளில் சென்றார் என்பதும் அதைத்தவிர அவர் சைக்கிளில் சென்றதற்கு வேறு எந்தவிதமான காரணமும் இல்லை என்று கூறி பல்வேறு வதந்திகளுக்கு விஜய் தரப்பினர் முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் விஜய் சைக்கிளில் சென்றதை பார்த்த பல இளைஞர்கள் நேற்று சைக்கிளில் சென்று வாக்களித்தனர். அதுமட்டுமின்றி பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் இனி அதிக அளவில் சைக்கிளை பயன்படுத்தப் போவதாக பல இளைஞர்கள் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். எனவே இன்று முதல் சைக்கிள் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் என்ன செய்தாலும் அது டிரெண்ட் ஆகி விடுவது வழக்கமாக உள்ள நிலையில் தான் சைக்கிளும் ட்ரெண்ட் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version