சினிமா செய்திகள்

சொகுசுக்காருக்கு இறக்குமதி வரி: சூர்யா, தனுஷூக்கும் விஜய் ஆதரவு!

Published

on

தளபதி விஜய் வாங்கிய சொகுசு கார் வரி விவகாரம் குறித்த வழக்கில் விஜய்யின் வழக்கறிஞர் வாதாடிய போது தனது வேதனையை நீதிபதியிடம் வெளிப்படுத்தியதோடு சூர்யா மற்றும் தனுஷுக்கும் ஆதரவாக அவரது வழக்கறிஞர் வாதாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய் வாங்கிய வெளிநாட்டு ஆடம்பர சொகுசு கார் ஒன்ருக்காக இறக்குமதி வரியிலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, விஜய் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்த விஜய் மேல்முறையீடு செய்தார் என்பதும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரிவிலக்கு கேட்பது என்பது சட்டப்படியான உரிமை என்றும் அந்த உரிமையின் அடிப்படையில் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம் என்றும், ஆனால் வரியே கட்டக் கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் வழக்கு பதிவு செய்ததாக நீதிபதியின் கருத்து இருந்தது என்றும் அது தனது மனதை புண்படுத்தியதாகவும் விஜய்யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் சொகுசு கார்களுக்கு வரிவிலக்கு கேட்கும் வழக்கில் தாங்கள் செய்யும் தொழில் குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனக்கு மட்டும் என்று சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர்களுக்கு இதே போன்ற கருத்துக்களை நீதிபதி தெரிவித்துள்ளது அவசியமற்றது என்றும் விஜய்யின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

விஜய்யின் வழக்கறிஞரை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version