தமிழ்நாடு
ரோல்ஸ்ராய் கார் வரி விவகாரம்: மேல்முறையீடு செய்தார் விஜய்!
வெளிநாட்டுக்கு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்
இங்கிலாந்தில் இருந்து வாங்கிய ரோல்ஸ் ராய் கார் இறக்குமதி வரி செலுத்திய நடிகர் விஜய், தமிழ்நாடு மற்றும் கேரளா உயர் நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி நுழைவு வரி செலுத்தவில்லை
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நடிகர் விஜய் இரண்டு வாரங்களில் வரி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றிய தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும் அபராதத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது
விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்து குறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள், முன்னாள் நீதிபதிகள் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள் என்பதும், விஜய் மேல்முறையீடு செய்தால் கண்டிப்பாக அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.