சினிமா செய்திகள்
வாரிசு படப்பிடிப்பில் கோபப்பட்ட விஜய்.. என்ன காரணம்?
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் வம்ஷி படிப்பாளியுடன் இணைந்துள்ள விஜய், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப நாடக கதையில் நடித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. வம்ஷி ஏற்கனவே கார்த்தி நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் ஆவார்.
விரைவில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில், முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அந்த படத்தின் இசை அமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாரிசு படத்தில் விஜய் பாடி ஆடிய ரஞ்சிதமே என்ற பாடல் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது.
அதனை அறிந்த விஜய், இது படத்தின் பப்ளிசிட்டிக்கு எந்த அளவிற்கு அந்த பாடல் உதவி இருக்கும். இதை யார் லீக் செய்தது யார் என லைட் மென் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்துக் கோபப் பட்டுள்ளார்.
மேலும் அருகிலிருந்து ஜிம் பாய்ஸ்ககளை பார்த்து நீங்கள் இத்தனை பெர் இங்கு இருந்தபோது, இதை ஏன் கவனிக்கவில்லை என்றும் கடிந்துள்ளார்.
முதல்முறையாக வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோபப்பட்டதைப் பார்த்துப் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெய சுதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
வாரிசு படம் 2023 பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாரிசு படத்தை தொடர்ந்து, மாஸ்டர் படத்தை இயக்கிய லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.