சினிமா செய்திகள்

விஜய், அஜித் குறியீடாக யாருக்கு ஓட்டு எனச் சொன்னார்களா?- மீம் பாய்ஸ் அட்ராசிட்டிஸ்

Published

on

இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நேரில் வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். 

அவர்கள் இன்று வாக்குச் சாவடிக்கு வந்த விதம் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. முன்னதாக நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் மக்களோடு மக்களாக நின்று ஓட்டு போட்டார். ஷாலினி வெள்ளை நிற மாஸ்க் அணிந்திருக்க, அஜித், சிவப்பு கறுப்பு நிறம் பொருந்திய மாஸ்க் அணிந்து ஓட்டு போட வந்திருந்தார். 

சிவப்பு மற்றும் கறுப்பு என்பது திமுகவின் கொடி நிறம். எனவே அஜித், திமுகவுக்கு தன் ஆதரவை சொல்லாமல் சொல்லி விட்டார் என்று யூகங்கள் சொல்லப்பட்டன. இதுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய், சிம்பிளாக சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். அவர் சைக்கிளில் வந்தது பெரிய விஷயம் அல்ல. அந்த சைக்கிளின் நிறமும் சிவப்பு மற்றும் கறுப்பு. இதனால் அவரும் திமுகவுக்கு ஆதரவாகத் தான் ஓட்டு போட வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

இது குறித்து விஜய் தரப்பு மட்டும் விளக்கம் கொடுத்திருந்தாலும், திமுகவினரும் இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே பாஜக தரப்புக்கும் விஜய்க்கும் பல சமயங்களில் மோதல் நடந்துள்ள நிலையில், அனைத்தையும் அறிந்தே விஜய் இப்படியான காரியத்தைச் செய்துள்ளார் எனப்படுகிறது. 

அஜித்தும் தன் செயல்பாடுகளின் விளைவுகளை நன்கு அறிந்த நபர் என்பதனால், அவரும் தெரிந்தே தான் கறுப்பு – சிவப்பு நிற மாஸக் அணிந்து வந்திருக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சு. 

Trending

Exit mobile version