சினிமா

நயன்தாராவுடன் திருமணம் காலதாமதம் ஆவது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

Published

on

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்ற நிலையில் இதுகுறித்து விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ’நயன்தாராவை எப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திருமணத்திற்கு அதிக பணம் செலவாகும் என்றும் அந்த பணத்தை நாங்கள் இருவரும் சேர்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் பணம் சேர்ந்தவுடன் திருமணம் என்றும் கூறியுள்ளார். இந்த பதில் அனைவரையும் நகைச்சுவைக்கு உள்ளாக்கியுள்ளது.

நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 5 கோடிக்கு மேல் சம்பளமாக பெற்று வரும் நிலையில் அவரிடம் இல்லாத பணமா? என்று இந்த ரசிகர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா தொற்று முடிவுக்கு வந்தபின் தங்களது திருமணம் நடக்கும் என்று இன்னொரு கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version