தமிழ்நாடு
ஆண்டவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன்
நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த 16 குடும்பங்களில் ஒருவர் சம்தானி பேகம். இவர் இன்று அளித்த பேட்டியில் அரசியல் அதிகாரத்தை வைத்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அந்த ஆண்டவனின் தண்டனையிலிருந்து கண்டிப்பாக ஒருநாள் தீர்ப்பு கிடைக்கும். அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாது என்று கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் தாயாரை வெடிகுண்டு சம்பவத்தில் இழந்து போராடி வருகிறோம் என்றும் கூறிய அவர் இப்போது விடுதலை ஆகி இருப்பவர் விடுதலைப் போராட்டத்திற்காக கஷ்டப்பட்டு போராடியவர் அல்ல என்றும் கூறினார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது என் அம்மாவும் அந்த வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்தார் என்றும் என் அம்மாவை பொட்டலம் கட்டி தான் கொடுத்தார்கள் என்றும் அது எங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.