தமிழ்நாடு
மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு
![karunanidhi statue - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/karunanidhi-statue.jpg)
இன்று சென்னையில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் நாடு வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்
மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என்றும் தாய்நாடு தாய்மொழி ஆகியவை மிகவும் முக்கியமானது என்றும் தாய்மொழி இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் கருணாநிதியின் வழிநின்று தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றும் மாற்றுக் கட்சித் தலைவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் நாம் மதிக்கவேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்
எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் மற்ற மொழிகளை எதிர்க்க கூடாது என்றும் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் என்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசினார்
எனது இதயத்தின் நெருக்கமான மாநகரம் சென்னை என்று கூறிய வெங்கையாநாயுடு ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி என்றும் சமூக நீதிக்காக பாடுபட்டவர் என்றும் கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு ஆகிய அனைத்து விதத்திலும் சிறப்பானவர் என்றும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்