இந்தியா

கனவு இந்தியாவை கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.. நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!

Published

on

75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“நமது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் நாம் நுழையும் வேளையில், நமது நாட்டின் விடுதலையின் வெற்றிக்காக போராடிய தலைவர்களின் எண்ணிலடங்காத உன்னத தியாகங்களை நினைவுக் கூர்வோம். அவர்களது கனவு இந்தியாவை கட்டமைக்க உறுதி மேற்கொள்வோம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், வளர்ச்சியின் பலன்களை முறையாக விநியோகிப்பதிலும், நாட்டில் ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலும் நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம். இதுதான் ‘பகிர்வோம், அன்பு செலுத்துவோம்’ என்ற நமது நாகரீக மாண்பின் அடித்தள நம்பிக்கையாகும். ‘நீதி, சுதந்திரம், சமநிலை, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் நமது அரசியலமைப்பு கொள்கையை அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

சுதந்திர தினம் என்னும் மகிழ்ச்சியான தருணத்தில், நமது ஆற்றல்களை மீண்டும் கண்டுணர்வதற்கு நம்மை முழுவதும் அர்ப்பணிக்கவும், நம் மக்களின் மிகப்பெரிய திறமைகளை உணரவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கான சரியான இடத்தை வழங்கவும் மீண்டும் ஒரு முறை உறுதி மேற்கொள்வோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version