தமிழ்நாடு
அமைச்சர் ஜெயக்குமார் சீரழித்த பெண்களின் லிஸ்டை வெளியிடுவேன்: வெற்றிவேல் அதிரடி!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பல குடும்பங்களை அவர் மந்திரி பதவியை வைத்து சீரழித்ததாகும் கூறி அதிரடியை கிளப்பியுள்ளார் அமமுகவை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் சிந்து என்ற பெண்ணை ஏமாற்றி குழந்தை கொடுத்ததாக பரபரப்பு புகார் கிளம்பியது. இந்த விவகாரத்தில் அவர் மீது ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய வெற்றிவேல், ஏன் சிந்து என்ற பெண் விஷயத்தில் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பத்தாம் மாதம் 28-ம் தேதி ஜெயக்குமாருக்கு சிந்து சம்பந்தமாக நான் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். இன்றுவரை பதில் இல்லை, இப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் தான் ஜெயக்குமார்.
ஜெயக்குமார் எந்தெந்த பெண்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்று வரிசையான லிஸ்டை வெளியிடுவேன். நாளையிலிருந்து இருந்து தினமும் ஒன்று ஒன்றாக சொல்வேன். ஜெயக்குமாருக்கு அவர் பண்ணிய தப்பு எல்லாமே தெரியும். அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு பல குடும்பங்களை சீரழித்து கொண்டிருக்கிறார் ஜெயக்குமார் என அதிரடியை கிளப்பியுள்ளார் வெற்றிவேல்.