சினிமா செய்திகள்

சசிகுமாருக்காக கதை எழுதி தயாரிக்கும் வெற்றிமாறன்!

Published

on

அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார்.

கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சூரி நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். சென்னை, மதுரையை கதைக்களமாக வைத்து இந்த படத்தைத் தயாரித்து இயக்குகிறார் வெற்றிமாறன். ஆடுகளம் படத்தைத் தயாரித்த கதிரேசன் இந்த படத்தின் முதன்மை தயாரிப்பாளர் என்றும், வெற்றிமாறன் இணை தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது.

சசிகுமார் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்த இரண்டு படங்களும் முடிப்பதற்குள் சூர்யா பாண்டி ராஜ் படத்தை முடித்துவிடுவார். அதன் பின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும்.

இவை மட்டுமல்லாமல் விஜய்யிடம் ஒரு கதையைச் சொல்லி வெற்றிமாறன் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version