சினிமா செய்திகள்

பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!

Published

on

பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

3 முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. இவர் ’பாலிகா வது’ என்ற பாலிவுட் தொடர் மூலம் பிரபலமானவர் என்பதும் அந்தத் தொடர் தமிழில் ’மண்வாசனை’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது என்பதும் இந்த தொடருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே

பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி மறைவிற்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு பாலிவுட் திரையுலகில் மிகப் பெரிய இழப்பு என்று தங்கள் இரங்கல் செய்திகள் அவர்கள் கூறி வருகின்றனர்

பாலிவுட் திரையுலகில் மூன்று முறை தேசிய விருது பெற்றவர் என்ற பெருமைக்குரிய சுரேகா சிக்ரி மறைவிற்கு நாமும் இரங்கல் தெரிவித்துக் கொள்வோம்.

தேசிய விருது மட்டுமின்றி பிலிம்பேர் விருது, டெலிவிஷன் அகாடமி விருது என பல விருதுகளை சுரேகா சிக்ரி பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version