சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 98

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப்குமார் கடந்த சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சையின் பயனின்றியும், முதுமை காரணமாகவும் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது

மொகல், மதுமதி உள்ளிட்ட புகழ்பெற்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார் என்பதும், பல ஆண்டுகள் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நடிகர் திலீப் குமார் சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நலம் தேறி வருவதாக அவரது மனைவி சாய்ராபானு தெரிவித்திருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. நடிகர் திலீப்குமார் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்த நிலையில் பிரார்த்தனை பலனின்றி இன்று அவர் காலமானார்

நடிகர் திலீப்குமார் கடந்த 1944ஆம் ஆண்டு ஜவர் பாட்டா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும், அவர் நடித்த கடைசி படம் கடந்த 1998ஆம் ஆண்டு குவ்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version